ஆதிசங்கரர் தான் தியானத்தில் கண்டு களித்த தாய் மூகாம்பிகையின் திருக்காட்சியை மற்றவர்களிடம் கூறினார். அம்பிகையின் தோற்றத்தை அப்படியே சிலையாக வடிக்க முடிவு செய்தார். சிலை வடித்து எடுக்கும் பரம்பரையில் மிகத் தேர்ச்சிப் பெற்ற ஸ்தபதி ஒருவரை அழைத்து திருவுருவச்சிலையை செய்ய ஏற்பாடு செய்தார். அதன்படி மூகாம்பிகை சிலை பஞ்சலோகத்தில் வடிக்கப் பெற்றது. திருவுருவச்சிலை மத்தியில் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலும் மற்றும் இதன் இருபுறமும் நின்ற...