
சபரிமலையில் இன்று மலையாள புது வருட பிறப்பாகும். இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடங்கும். மாலையில் தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் படிபூஜை நடைபெறும். வரும் 21ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும்.